என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஞ்சாயத்து மின்மோட்டார் திருட்டு
- மணல் பரப்பில் வைத்து வயரை எரித்து மோட்டாரை திருடி சென்றுள்ளனர்.
- ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் பஞ்சாயத்து நல்லம்மாள்புரம் குளக்கரையில் பஞ்சாயத்துக்கு சொந்தமான மின்மோட்டார் அறை உள்ளது.
இந்த அறை கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த மின்மோட்டார் மற்றும் வயர்களை திருடி சென்று அருகில் உள்ள மணல் பரப்பில் வைத்து வயரை எரித்து மோட்டாரை திருடி சென்றுள்ளனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாயத்து உறுப்பினர் அன்னலிங்கம் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






