search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொசஸ்தலை ஆற்று குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை
    X

    கொசஸ்தலை ஆற்று குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை

    • மொன்னவேடு-ராஜபாளையம் ஆகிய 2 கிராமங்களையும் இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 13.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
    • பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள் இறையூர், மொன்னவேடு, மெய்யூர், ராஜபாளையம்.

    இந்த கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இப்பகுதி மக்கள் கொசஸ்தலை ஆற்றை கடந்து தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும் அங்கிருந்த தரைப்பாலம் கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது சேதமடைந்தது.

    இதையடுத்து அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து கிராமமக்கள் பயன்படுத்தி வந்தனர். கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது இறையூர், மொன்னவேடு உள்ளிட்ட கிராமமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும்நிலை உள்ளது.

    இந்த நிலையில் மொன்னவேடு-ராஜபாளையம் ஆகிய 2 கிராமங்களையும் இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 13.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த பாலம் கட்டும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறும் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் பள்ளி மாணவிகளும், பொதுமக்களும் ஆற்றுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

    மேலும் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் ஓரத்தில் ஆற்றுக்குள் கிடக்கும் இரும்பு கம்பிகள் குத்தி பலர் காயம் அடைவதாகவும், வாகனங்கள் பழுது ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    எனவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×