search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ-நாம் திட்டத்திற்கு எதிர்ப்பு: 3-வது நாளாக நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெறவில்லை
    X

    பரபரப்பாக காணப்படும் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெறிச்சோடிக் கிடப்பதை படத்தில் காணலாம்.

    இ-நாம் திட்டத்திற்கு எதிர்ப்பு: 3-வது நாளாக நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெறவில்லை

    • செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதி விவசாயி கள், தாங்கள் அறுவடை செய்த நெல்லினை செஞ்சி ஒழுங்கு முறை விற்ப னைக் கூடத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வந்த னர். அப்போது இ.நாம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து நெல் வியாபாரி களுக்கு ஆதரவாக, எடை போடும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நெல் மூட்டைகள் தேங்கியது. இதையடுத்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படு வதாக அறிவிக்கப்பட்டது. இதனையறியாத விவசாயி கள் நெல் மூட்டைகளுடன் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வந்தனர். நெல் கொள்முதல் செய் யப்படாததை கண்டித்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த வாகனங்களை நடு ரோட்டில் விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து, விவ சாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை மேல்மலை யனூர் அருகேயுள்ள வளத்தி, அவலூர்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனையேற்ற விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அருகில் உள்ள மற்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சென்றனர். இந்நிலையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்றும் நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை. இ-நாம் திட்டத் திற்கு எதிர்ப்பு தெரி வித்து 3-வது நாளாக இன்றும் எடைபோடும் தொழி லாளர்கள் பணிக்கு வர வில்லை. இவர்களுக்கு ஆதரவாக நெல் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மற்றும் நெல் வியாபாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரி கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×