search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே நீர், மோர் பந்தல் திறப்பு - ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

     நீர், மோர், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சங்கரன்கோவில் அருகே நீர், மோர் பந்தல் திறப்பு - ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் விதமாக நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தி.முக. சார்பாக நகரம், கிராமத்தில் மாவட்ட இளைஞரணி முகேஷ் ஏற்பாட்டில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் விதமாக நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன், வாசுதேவநல்லூர் ஒன்றிய துணை சேர்மன் சந்திரமோகன், தொழிற்சங்கம் சந்திரன், கிளை செயலாளர் ஆனந்த், முள்ளிக்குளம் கிளை செயலாளர் கணேசன், தங்கபாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞரணி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×