பணகுடி அருகே வாலிபர் கொலையில் ஒருவர் கைது

கஞ்சா போதையில் கொலைசந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை
பணகுடி அருகே வாலிபர் கொலையில் ஒருவர் கைது
Published on

பணகுடி:

பணகுடி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பசுபதி(வயது 24). ஆட்டோ டிரைவர்.

சம்பவத்தன்று இரவு இவர் ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பசுபதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியில் கஞ்சா புகைப்பவர்கள் அதிக அளவில் இருப்பார்கள். அவர்கள் கஞ்சா போதையில் அந்த வழியாக சென்ற பசுபதியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே பணகுடி அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்த கணேசன் (59) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் கஞ்சா போதையில் பசுபதியின் கழுத்தை துண்டால் இறுக்கியும், கல்லால் தாக்கியும் கணேசன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com