என் மலர்
உள்ளூர் செய்திகள்

குப்பனூர்-கொட்டச்சேடு-வாழவந்தி சாலையில் பாலம் கட்டும்பணியை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
ஏற்காடு மலைப்பாதையில்சாலை விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை-கலெக்டர் கார்மேகம் தகவல்
- ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சி, மஞ்சவாடி கணவாய் பகுதியில் சேலம் - அரூர் சாலையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
- குப்பனூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் ரூ.1.70 கோடி செலவில் தடுப்புச்சுவர் மற்றும் சிறு மேம்பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்ட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சி, மஞ்சவாடி கணவாய் பகுதியில் சேலம் - அரூர் சாலையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களு ஆலோசனை வழங்கினார்.
தொடந்து, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் குப்பனூர் – கொட்டச்சேடு – வாழவந்தி சாலையில் குப்பனூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் ரூ.1.70 கோடி செலவில் தடுப்புச்சுவர் மற்றும் சிறு மேம்பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்ட்டார். இந்தபணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
நேற்று சாலை விபத்து ஏற்பட்ட கொட்டச்சேடு - பெலாத்தூர் செல்லும் சாலையினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு விபத்துக்கான காரணங்கள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், சேலம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
சாலை சந்திப்புகள், வளைவுகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெறிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் பகுதியாகும். குறிப்பாக, கோடை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வந்துசெல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்தில்லாப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தாமல் இருப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் போன்ற சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் துரை, மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா, டி.எஸ்.பி.தையல்நாயகி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், ஏற்காடு தாசில்தார் தாமோதரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






