search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
    X

    சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வெற்றிலையில் அலங்காரம் செய்யப்பட்டது.

    ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

    • காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
    • கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    குமாரபாளையம்:

    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரி யம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தர சியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    பாண்டுரங்கர் கோவிலில் சிறப்பு ஆனி திருமஞ்சன விழா, சரவணா தியேட்டர் எதிரில் கருப்பண்ண சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×