search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் மெக்ஐவரின் 147-வது நினைவு தினத்தையொட்டி மலா் வளையம் வைத்து அஞ்சலி
    X

    ஊட்டியில் மெக்ஐவரின் 147-வது நினைவு தினத்தையொட்டி மலா் வளையம் வைத்து அஞ்சலி

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
    • மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.

    ஊட்டி,

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகள் அப்போது தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு 1867-ல் பணி நிறைவடைந்தது.

    சுமாா் 19 ஆண்டுகள் அயராது உழைத்து அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக திகழ்ந்த மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.

    ஊட்டியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் அவரது நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அவருடைய 147-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்க ப்பட்டது. இதையொட்டி தோட்டக் கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி மற்றும் அதிகாரிகள் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் ஆலய பங்குத் தந்தை சிறப்புப் பிராா்த்தனை நடத்தினாா்.

    Next Story
    ×