search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரும் 5ந் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்- தமிழக காங்கிரஸ் அறிவிப்பு
    X

    தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை 

    வரும் 5ந் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்- தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

    • தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம்.
    • ஆகஸ்ட் 9 முதல் 14 வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ள முடிவு.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூறுகிற வகையில் ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ளவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அத்தியாவசியப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் முற்றுகை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்த இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுகின்ற வகையிலும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துகளை கூறி, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் இத்தகைய போக்கை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×