search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர்:போலீசார் விசாரணை
    X

    பண்ருட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர்:போலீசார் விசாரணை

    • இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் மகன் உள்ளார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    • இவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து எனது அம்மாவிடமும், என்னிடம் பிரச்சனை செய்வார்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக போலீசாருக்குக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த நபரை குறித்து விசாரணை நடத்தியபோது இறந்த நபர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55) என்பதும். நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் மகன் உள்ளார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்தின் மகன் பாலச்சந்தரிடம் கேட்டபோது எனது தந்தைக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து எனது அம்மாவிடமும், என்னிடம் பிரச்சனை செய்வார். இதனால் இவரை விட்டு பிரிந்து நாங்கள் கடலூருக்கு சென்று விட்டோம். நான் சென்னையில் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில் என து தந்தை இறந்து விட்டார் என்று செய்தி கேட்டு நான் சென்னையில் இருந்து பண்ருட்டிக்கு வருவதாக அவர் கூறினார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×