search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே இரட்டை கொலையில் முதியவர் கைது

    • விளாத்திகுளம் அருகே பூதலபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு புகுந்த மர்மநபர் ஒருவர் ராஜாமணியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
    • அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் பொன்னுச்சாமி(50) என்பவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூதலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா மனைவி ராஜாமணி(வயது 68).

    இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு புகுந்த மர்மநபர் ஒருவர் ராஜாமணியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் பொன்னுச்சாமி(50) என்பவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்ண

    இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் பூதலபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா(52) என்பவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். அதன்அடிப்படையில் அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் மது அருந்துவது கிடையாது. ராஜாமணி மறைமுகமாக ஒரு முறை என்னை திட்டியதால் எனக்கு அவமானமாக இருந்தது. சம்பவத்தன்று ராஜாமணி வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன்.

    அவ்வப்போது பிச்சையாவுக்கு ராஜாமணி உணவு வழங்கி வந்ததால் பிச்சையாவையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தேன். அதன்பின்னர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×