search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி கால்வாயில் இறந்து கிடந்த மூதாட்டி
    X

    கல்லிடைக்குறிச்சி கால்வாயில் இறந்து கிடந்த மூதாட்டி

    • கல்லிடைக்குறிச்சி நதியுண்ணி கால்வாயில் பெண் உடல் ஒன்று இறந்த நிலையில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நதியுண்ணி கால்வாயில் பெண் உடல் ஒன்று இறந்த நிலையில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் உடலை மீட்டனர். தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கல்லிடைக்குறிச்சி ஏகாம்பரம் தெருவை சேர்ந்த தர்மாம்மாள் (வயது 80) என்பது தெரியவந்தது. அவர் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×