search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே  பாம்பு கடித்து மூதாட்டி சாவு
    X

    சின்னசேலம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி சாவு

    • பாண்டுரங்கன் நிலத்திற்கு செல்வதற்காக ஏரிக்கரையில் இறங்கு ம்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியை பாம்பு கடித்தது.
    • இது குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் .இவரது தாயார் முத்தம்மாள் (வயது 70) இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முத்தம்மாள் தனது மற்றொரு மகனான பாண்டுரங்கன் நிலத்திற்கு செல்வதற்காக ஏரிக்கரையில் இறங்கு ம்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியை பாம்பு கடித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×