search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பாவூர்சத்திரத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    • கனிகா தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • மனமுடைந்த கனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்திரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வர் திருமலைகுமார். இவரது மனைவி சந்தனமாரி. இவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் கனிகா(வயது 20).

    தற்கொலை

    இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கனிகா அடிக்கடி செல்போனில் பேசிக்கொ ண்டே இருந்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்த தாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கனிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொ ண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீசார், கனிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×