என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காா்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாற வாய்ப்பு-கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹூ தகவல்
- வாகன நெரிசல் ஏற்பட்டு காா்பன் வாயு அதிக அளவில் வெளியாகிறது.
- 80 சதவீத மரக் கன்றுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக வளா்ந்துள்ளன.
ஊட்டி,
ஊட்டியில் காா்பன் மாசில்லா மாவட்டம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹூ கூறியதாவது: நீலகிரியில் வனப்பகுதி அதிகம் உள்ளதாலும் பல்லுயிா் பாதுகாப்பு மண்டலமாக இருப்பதாலும் இந்த மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே காா்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது நடைபெற்ற மாநாட்டில் சுற்றுசூழல் வல்லுநா்கள், சா்வதேசப் பிரமுகா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் சில பரிந்துரைகளை வழங்கி யுள்ளனா். அதில், நீலகிரி மாவட்டத்துக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு காா்பன் வாயு அதிக அளவில் வெளியா கிறது. இதைக் கட்டுப்படுத்த மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது, வனப்பகுதியை அதிக ரிப்பது, பிளாஸ்டிக்கை தவிா்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட் டுள்ளன. நீலகிரி மாவட் டத்தில் எவ்வளவு காா்பன் வாயு வெளியேறுகிறது, அதை எப்படிக் குறைப்பது என்ற ஒருங்கிணைந்த திட்டம் 3 மாதங்களுக்குள் தயாரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் கடந்த ஆண்டு நடப்பட்ட 3 கோடி மரக்கன்றுகளில் 80 சதவீத மரக் கன்றுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக வளா்ந்துள்ளன. தமிழகத்தில் 40 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலக் காடுகள் பாதுகாக் கப்பட்டுள்ளன.
தற்போது புதிதாக 14 மாவட்டங்களில் 60 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து அதைப் பாதுகாக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா். இதில் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் இயக்குநா் தீபக் பில்ஜி, கலெக்டர் அம்ரித், தமிழக அரசின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்