search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டளை கிராமத்தில் புதிய மின்மாற்றி- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    புதிய மின்மாற்றியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டளை கிராமத்தில் புதிய மின்மாற்றி- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    • சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் புகைப்படத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொரு ளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. களக்காடு ஒன்றியம், களக்காடு வட்டாரத் திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட செங்களாக்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள கட்டளை கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சரியான மின்சார சேவை தேவை என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கட்டளை கிராமத்திற்கு மின்சார துறை அதிகாரிகள் உதவியுடன் புதியதாக மின் மாற்றி அமைத்து திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    அதன் பின்பு சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் புகைப்படத்தையும், டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அலெக்ஸ் மற்றும் களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சுப்பிரமணியன், காங்கிரஸ் ஊடக பிரிவு ஸ்ரீதேவி மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×