search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் ஹேக்கத்தான் போட்டியில் சாதனை
    X

    பரிசு சான்றிதழை மாணவர்கள் கல்லூரி நிர்வாகிகளிடம் காட்டினர்.

    நெல்லை எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் ஹேக்கத்தான் போட்டியில் சாதனை

    • தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் மூலம் அனைத்து தேசிய போட்டி மற்றும் அரசின் ஸ்டார்ட்அப் போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.

    இதனிடையே சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 குழுவினர் கலந்து கொண்டனர்.

    எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி சார்பில் எம்பெ டெட் அண்ட் ஐ.ஓ.டி அப்ளைட் ஆய்வக மாண வர்கள் கிளாட்சன் ஜோயல் ராஜா, சாம் சார்லஸ், தங்கவேல், டோனல் ஆகிய குழுவினர் மீன் பண்ணையில் மீன் வளத்திற்கான அடிப்படை ஸ்மார்ட் மிதவை ஒன்றை கண்டுபிடித்தனர்.

    இந்த கண்டுபிடிப்புக்கு சிறப்பு பரிசு, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு 8 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த தானியங்கி மிதவை மூலம் மீன்களுக்கு உணவு, மாசு படிந்த தண்ணீரை கண்டறிதல் உள்ளிட்டவைகளை அது கண்டுபிடிக்க உதவும்.

    இந்தப் போட்டி மூலம் சக ஹேக்கர்களைச் சந்திக்கவும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், அனுபவமிக்க வழிகாட்டி களுடன் சேர்ந்து திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது.

    இப்போட்டியில் பங்கேற்க ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன் ஆகியோரையும் லஷ்மிநாராயணன், உதவி பேராசிரியர் பெரிஸ்கா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×