search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் உத்தரபிரதேச சாமியாரை கைது செய்யக்கோரி புகார்
    X

    நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் மனு அளித்த தி.மு.க.வினர்.

    நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் உத்தரபிரதேச சாமியாரை கைது செய்யக்கோரி புகார்

    • மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமாரிடம் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
    • இதேபோல் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்த உத்தரபிரதேச சாமியாரை கைது செய்யக்கோரி நெல்லையில் தி.மு.க.வினர் புகார் அளித்தனர். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமாரிடம் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடமும் மனு அளித்தனர்.

    அப்போது வக்கீல் அணி தலைவர் சாமுவேல் பாஸ்கர், துணை அமைப்பாளர்கள் ஜோயல், தவசிராஜன் ஆகியோர் உடன்இருந்தனர். இதேபோல் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×