என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியாகராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருக்குவளை தியாகராஜசாமி கோவிலில் நெல் மகோத்சவ விழா
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- ஆண்டுதோறும் நடைபெறும் நெல் மகோற்சவ விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
நாகப்பட்டினம்:
தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ விழா நடைபெற்றது.
தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர்.
மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை ஆரூரில் சோ்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், நெல் மலையோடு பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் நெல் மகோற்சவ திருவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென தமிழக அரசுக்கு, தருமை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.






