search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே  பஸ்சில் போதை ெபாருட்கள் கடத்திய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட வாலிபரையும், அவரை கைது செய்த போலீசாரையும் பறிமுதல் செய்த போதை பொருட்களையும் படத்தில் காணலாம்.

    திருக்கோவிலூர் அருகே பஸ்சில் போதை ெபாருட்கள் கடத்திய வாலிபர் கைது

    • திருக்கோவிலூர் அருகே பஸ்சில் போதை ெபாருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் போதை பாக்குகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த விக்ரம் சிங் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் கைது செய்யப்பட்ட விக்ரம் சிங் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், செங்கம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் போதை பாக்குகள் கேட்பவர்களுக்கு பஸ் மூலம் கடத்திக்கொண்டு வந்து விநியோகம் செய்யும் பழக்கம் உள்ளவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×