search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபும் அருகே : சாராயம் விற்ற 3 பேர் கைது
    X

    சங்கராபும் அருகே : சாராயம் விற்ற 3 பேர் கைது

    • சங்கராபும் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஊராங்காணி ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (34), நத்தகுளம் அருகில் சாராயம் விற்ற அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த பிச்சன் (65) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×