search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே கல்லை கட்டி கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் விழுப்புரத்தை சேர்ந்தவரா? போலீசார் விசாரணை
    X

    திட்டக்குடி அருகே கல்லை கட்டி கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் விழுப்புரத்தை சேர்ந்தவரா? போலீசார் விசாரணை

    • கிணற்றில் தலைகுப்புற ஒருவர் பிணமாக தண்ணீ ரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வாலிபரின் உடலில் சட்டை காலர் ஒரு பகுதி மட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் வெங்கனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் விவ சாய நிலம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக மருதமுத்து குத்தகை நிலத்திற்கு செல்ல வில்லை. நேற்று தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தலைகுப்புற ஒருவர் பிணமாக தண்ணீ ரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமநத்தம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். அப்போது கிணற்றில் கிடந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் கால்கள் இரண்டும் கயிறால் கட்டி, கல் ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. அவரது உடல் கைப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வலை மற்றும் அதன் உள்ளே வைக்கோல், டிஜிட்டல் பேனர் கொண்டும் சுற்றப்பட்டிந்தது.

    இதை பார்த்த போலீசார் இந்த வாலிபரை யாரோ கொடுரமாக கொலை செய்து இங்கு வீசி சென்றுள்ளனர் என்று கூறி உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதற்கு போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்தது. இதனால் பிரேத பரிசோதனை முடிந்த பிறகுதான் அவர் யார் ? அவரை எதற்காக இவ்வளவு கொடூரமாக கொலை செய்தார்கள் என்பது குறித்து தெரிய வரும் என்பது போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இறந்த வாலிபரின் உடலில் சட்டை காலர் ஒரு பகுதி மட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சட்டை காலரில் விழுப்புரம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் போலீசார் விழுப்புரத்தில் இதுவரை காணாமல் போன வர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் டிஜிட்டல் பேனரும் விழுப்புரத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். கொடூர மாக கொலை செய்து உடலை கிணற்றுக்குள் வீசி சென்றவர்கள் யார் என்றும், இறந்த வாலிபருக்கும் அவர்க ளுக்கும் முன்விரோத தகராரில் இந்த கொலை நடந்திருக்குமோ என்று கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×