என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
- கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார்.
- கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தில் ஊருக்கு நடுவே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார். வழக்கம் போல கோவிலை திறப்பதற்காக இன்று காலை பூசாரி சபாபதி கோவிலுக்கு வந்தார். கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கீழிருப்பு கிராமத்தில் தொடர்ந்து கோவில் உண்டியல் உடைப்பு சம்பவம் நடைபெற்று வருவதால்குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கீழிருப்பு சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்