search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே பிறந்த 38 நாளில் குழந்தை திடீர் சாவு
    X

    கள்ளக்குறிச்சி அருகே பிறந்த 38 நாளில் குழந்தை திடீர் சாவு

    • செல்லதுரை எனக்கும் ஷாலினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி மறுத்ததாக தெரிகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல். அவரது மகள் ஷாலினி (வயது 20) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லதுரை என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் இதனால் ஷாலினி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு செல்லதுரை எனக்கும் ஷாலினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த மாதம் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லது ரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நி லையில் ஷாலினிக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பு யாஸ்வின் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக சளி இருந்து வந்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை இறந்து போனது. இது குறித்து விளம்பார் கிராம நிர்வாக அலுவலர் அலமு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×