search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
    X

    சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

    • சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதியில் சின்னசேலம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது வீ.கூட்டுரோடு அருகே வேப்பூர் ரோட்டில் உள்ள பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்குரிய 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ள னர். பின்னர் அவர்களை சோதனை செய்ததில் 250 கிராம் கஞ்சா பிடிபட்டது. 2 வாலிபர்களையும் சின்ன சேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (வயது28) என்பதும், மற்றொரு நபர் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சாத்தப்பாடி கிராமம் மடத்தெருவைச் சேர்ந்த அரங்கநாதன் (வயது 28) என்பதும் தெரியவந்தது. பின்பு 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×