என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.பி.ஏ. பாலிடெக்னிக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    என்.பி.ஏ. பாலிடெக்னிக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

    • மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை சட்டம் பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
    • பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் என்.பி.ஏ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அல்ப்பிரேட் எபினேசர் தொடங்கி வைத்தார்.

    இதில் கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வனிதா தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை சட்டம் பற்றியும், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றியான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    அதோடு கோத்தகிரி வக்கீல் சங்கர் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், பாலியல் சட்ட மற்றும் குற்றப்பிரிவுகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    Next Story
    ×