search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் போதை மாத்திரைகள், போதை டானிக்குகள் பறிமுதல்: விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது
    X

    (கோப்பு படம்)

    சென்னையில் போதை மாத்திரைகள், போதை டானிக்குகள் பறிமுதல்: விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

    • வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 5 பேரிடம் போலீசார் விசாரணை.
    • மருந்தகங்களுக்கு சப்ளை செய்யும் மருந்துகளை போதை மருந்துகளாக மாற்றி விற்பனை.

    வேளச்சேரி:

    சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமிஷனர் சிவா மற்றும் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கொண்ட தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் 4,400 போதை மாத்திரைகள் மற்றும் 90 போதை டானிக்குகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஜானகிராமன், முனீஸ்வரன், பாலுசாமி, சுல்தான் அலாவுதீன், நரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் சுல்தான் அலாவுதீனும், நரேசும் மருத்துவ பிரதிநிதிகளாக வேலை பார்த்து வருவதும் இவர்கள் மருந்துகளை மருந்தகங்களுக்கு சப்ளை செய்யாமல் அவற்றை போதை மருந்துகளாக மாற்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×