search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரசிங்கன்பேட்டை புவிசார் குறியீடு பெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியீட்டு விழா
    X

    புவிசார் குறியீடு பெற்ற நரசிங்கன்பேட்டை நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியிடப்பட்டது.

    நரசிங்கன்பேட்டை புவிசார் குறியீடு பெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியீட்டு விழா

    • 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே நரசிங்கன்பேட்டை புவிசார் குறியீடு பெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியீட்டு விழா, இசைக்கருவி தயாரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா, நாதஸ்வர இசை திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வரவேற்றார்.

    நாதஸ்வர கலைமாமணி கணேசன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம், வக்கீல் சஞ்சய் காந்தி, ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய குழு துணை தலைவர்கள் அண்ணாதுரை, பத்மாவதி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நாதஸ்வரம் அஞ்சல் உரையை அஞ்சல் மண்டல தலைவர் அப்பா க்கண்ணு கோவிந்தராஜன் வெளியிட அதைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பெற்றுக் கொ ண்டார்.முன்னதாக கலைமா மணி மீனாட்சி சுந்தரம், சேஷகோபாலன் சகோத ரர்கள், வித்வான்கள் கார்த்திக், தங்க ராஜா, மனோ கரன், ராதாகிருஷ்ணன், குருநாதன் , ராஜாராமன் ஆகியோர் இணைந்து 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உஷா, ராஜா, பேரூராட்சி தலைவர்கள் புனிதா ஜெயபால் வனிதா ஸ்டாலின் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×