search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் சோகம் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
    X

    நாமக்கல்லில் சோகம் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    • நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    காதல் திருமணம்

    நாமக்கல் அருகே உள்ள சிங்கிலிபட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 30). இவர்களுக்கு 3½ வயதில் குழந்தை உள்ளது.

    காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றும் அவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இளம்பெண் தற்கொலை

    இதில் மனமுடைந்த தாமரை செல்வி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×