search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    X

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான், பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது.
    • பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், தேன், கரும்புச்சாறு விபூதி உள்ளிட்ட 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெரு மான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவே லீஸ்வரர் கோவில், மாவு ரெட்டி பீமேஸ்வரர் கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில், பொத்தனூர் காசி விஸ்வநாதர் கோவில், பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்ப ரேஸ்வரர் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்ட வர் கோவிலில் உள்ள பருவ தஈஸ்வரர், பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெரு மானுக்கும், நந்திகேஸ்வ ரருக்கும் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகளும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது. இதில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×