search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீலநாயக்கன்பட்டியில் டேங்கர் லாரி மோதி முதியவர் பலி
    X

    சீலநாயக்கன்பட்டியில் டேங்கர் லாரி மோதி முதியவர் பலி

    • சண்முகம் (வயது 66). இவர் இன்று காலை சைக்கிளில் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
    • டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சண்முகம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் அம்மாணி கொண்டலாம்பட்டி அரசமரத்து கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 66). இவர் இன்று காலை சைக்கிளில் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, ஆத்தூரில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சண்முகம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் அன்னதானபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கர் லாரியை ஓட்டி வந்த, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொம்மிடியை சேர்ந்த இளமுருகன் (62) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×