என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மகளிர் அரசு கல்லூரியில்காலியாக உள்ள 165 இடங்களில் மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம்
- கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் காலியாக உள்ள பாடப் பிரிவில் மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
- 2023-24 மாணவர்கள் சேர்க்கையில் இது வரை 910 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் காலியாக உள்ள பாடப் பிரிவில் மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது : நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 3200 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
2023-24 மாணவர்கள் சேர்க்கையில் இது வரை 910 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வரலாறு ஆகிய பாடப் பிரிவில் மாணவிகள் சேர 165 இடங்கள் உள்ளன. காலியாக உள்ளதால் மாணவிகள் கல்லூரியில் செப்டம்பர் 5- ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Next Story






