என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம்
- பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 1.40 மணி அளவில் திடீரென அதிபயங்கர சத்தத்துடன் வெடி வெடிப்பது போன்ற சத்தம் ஏற்பட்டது.
- இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, பரமத்தி, ஒத்தக்கடை, கீரம்பூர், மணியனூர், கந்தம்பாளையம், நல்லூர், பெருங்குறிச்சி, ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், வடகரை யாத்தூர், சோழசிராமணி, கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 1.40 மணி அளவில் திடீரென அதிபயங்கர சத்தத்துடன் வெடி வெடிப்பது போன்ற சத்தம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
மேலும் ஜன்னல்கள் , கண்ணாடிகள் அதிர்ந்தன. கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உனர்ந்தனர். ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வருவாய்த்துறையி னரிடம் கேட்டபோது அதி வேக ஜெட் விமானம் தாழ்வாக பறந்து செல்லும் போது வழக்கமாக இது போன்ற வெடிச்சத்தம் போல் அடிக்கடி கேட்பதாக தெரிவித்தனர்.






