search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க கலெக்டரிடம் கோரிக்கை மனு
    X

    கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

    • தமிழக அரசு, பொதுமக்க ளுக்கு பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
    • அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பங்கு அதிகம் உள்ளதால் பெருமைப்படுகிறோம்.

    நாமக்கல்:

    கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, பொதுமக்க ளுக்கு பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பங்கு அதிகம் உள்ளதால் பெருமைப்படுகிறோம்.

    தற்போது தமிழகத்தில் உள்ள, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாகும்.

    ஆனால், தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்காதது வேதனை அளிக்கிறது.

    நாங்களும் முழுநேரம் பொதுமக்களுக்கு பணிகளை செய்து வருகிறோம். அதனால், எங்கள் மனுவை கருத்தில் கொண்டு, கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×