என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில்  நாம் தமிழர் கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    சிவகிரியில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சீனிவாசன், மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் காளிராஜ், செல்வம், ராஜா, வினோத்குமார், குட்டித்துரை, சவுந்தரராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அண்டை மாநிலமான கேரளாவுக்கு மலை வளங்களை உடைத்து கடத்தப்படும் கனிம வளங்களையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிவகிரிக்கு மேற்கே ஒவ்வொரு செங்கல் சூளைகளிலும் மலைபோன்று குவித்து வைக்கப்பட்டுள்ள மண் மற்றும் மணலை உடனே அரசு கையகப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×