search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்- 2 பேருக்கு வலைவீச்சு
    X

    நாங்குநேரி அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்- 2 பேருக்கு வலைவீச்சு

    • கணவரை பார்த்து விட்டு வேல்செல்வி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • ஐயாகுட்டி, முருகன் ஆகியோர் வேல்செல்வியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை கருங்குளத்தை சேர்ந்தவர் வானுமாமலை என்ற குரளி வானுமாமலை. இவர் மீது களக்காடு, நாங்குநேரி, மூன்றடைப்பு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவரை நாங்குநேரி போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்தனர். இதையடுத்து அவரது மனைவி வேல்செல்வி (வயது28) நாங்குநேரி வந்து கணவரை பார்த்து விட்டு, நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    மூன்றடைப்பு பஜாரில் சென்ற போது, செங்குளத்தை சேர்ந்த ஐயாகுட்டி, பாணாங்குளத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் வேல்செல்வியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்த 2 பேரும், காரை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று வேல்செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக ஐயாகுட்டி, முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×