என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் டாக்டர் உள்பட 2 பேரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
- கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- தஞ்சை மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
கோவை,
விருதுநகர் அருப்பு க்கோட்டையை சேர்ந்தவர் யோகேஷ்வரன் (வயது 22). இவர் கோவை சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி பல் மருத்துவராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து யோகேஷ்வரன் சூலூர் போலீசில் புகார் அளித்தார்.
இதே போன்று சூலூரை சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி (25) என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி திருடர்களை தேடி வந்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள் 2 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் அவர்களை படித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் இதேபோன்று வேறு ஏதாவது சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்