என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் தாய், மகள் திடீர் மாயம்
- அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர்.
- வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மற்றும் தங்கை காணவில்லை.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21).மீனவர். இவரது தாய் வனரோஜா (வயது 42). தங்கை அனுசியா (வயது 19). அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மற்றும் தங்கை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் 2 பேரையும் பல்வேறு இடத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வன ரோஜா, அனுசியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகரில் தாய், மகள் மாயமான சம்பவம் பரபரப்பாக காணப்பட்டு உள்ளது.
Next Story






