என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினரை படத்தில் காணலாம்.
அ.ம.மு.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
- அ.ம.மு.க. மாவட்ட பொருளாளர் பாளை ரமேஷ் தலைமையில் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- கடந்த 2 ஆண்டில் தி.மு.க. 2.73 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் அதிக அளவில் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அ.ம.மு.க. மாவட்ட பொருளாளர் பாளை ரமேஷ் தலைமையில் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில் அ.ம.மு.க.வை சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் அரைஸ், இளைஞரணி சண்முகராஜ், பிஆர்பி. ராஜா, இளை ஞரணி செயலாளர் மகேஷ், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என பலர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பர மசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேர வை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா பேசியதாவது:-
தற்போது தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. ஜெயலலிதாவுக்கு பின்னர் 4 ஆண்டு காலம் நல்லாட்சி நடத்திய திறமை யான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம், மினி கிளினிக், தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் பைக் உள்ளிட்டவை தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டில் தி.மு.க. 2.73 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. சரியான பாதையில் அ.தி.மு.க. தான் பயணிக்கிறது என்பதை அறிந்து அ.ம.மு.க. இளை ஞர்கள் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.