என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: ஊரப்பாக்கம் ஊராட்சியில் 1000 பேருக்கு புடவை, பிரியாணி வழங்கப்பட்டது
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: ஊரப்பாக்கம் ஊராட்சியில் 1000 பேருக்கு புடவை, பிரியாணி வழங்கப்பட்டது

    • பிறந்தநாள் விழாவிற்கு கிளாம்பாக்கம் திமுக கிளை செயலாளர் சி.ஜே.கார்த்தி தலைமை தாங்கினார்.
    • 70 கிலோ எடைகொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயன்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஊரப்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கிளாம்பாக்கம் திமுக கிளை செயலாளர் சி.ஜே.கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான் தினகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வன், மோகனாகண்ணன், பி.எஸ்.மலைராஜா, ஜே.கே.தினேஷ், ஒன்றிய துணை செயலாளர் பிரதீபா ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 70 கிலோ எடைகொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பின்னர் 700-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் 1000 பேருக்கு புடவை மற்றும் பிரியாணி ஆகியவற்றை வழங்கினர்.

    இதில் கிளை செயலாளர்கள் மெய்யழகன், சாய்ராம், முருகன், வாசு, கமலநாதன், புஷ்பராஜ், சண்முகம், ரமாதேவி, எஸ்.எம்.சேகர், இன்பசேகர், டெக்ஸ்பாபு, கிறிஸ்டோபர், தமிழ்ச்செல்வன், வார்டு உறுப்பினர்கள் மலர் தனசேகரன், மஞ்சுளா புஷ்பராஜ், தமிழ்செல்வம், தேவி நேரு, சாந்தி கார்த்தி, பார்த்திபன், கலைவாணி வினோத் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் 3-வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் சி.ஜெ.ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×