என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்
9 நாள் பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
- 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
- முதலீடுகளை ஈர்க்க, முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சென்னை:
தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்பினார்.
மொத்தம் 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு அவர் சென்னை திரும்பினார்.
முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.