search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டை கூட்டுரோட்டில்  மாணவி மாயம்
    X

    பகண்டை கூட்டுரோட்டில் மாணவி மாயம்

    • அனுநிரோஷா தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டைகூட்டுரோட்டை சேர்ந்தவர் தோமாஸ் மகள் அனுநிரோஷா (வயது17). இவர் தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அரசு பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அனுநிரோஷா தனது பெரியப்பா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின் இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×