என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் விபரீதம்; கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை
    X

    குடும்ப தகராறில் விபரீதம்; கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை

    • மனவேதனை அடைந்த அஷ்டலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    • தகவலறிந்த சுபாசும் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 25).டிரைவர்.

    இவரது மனைவி அஷ்டலட்சுமி (20). இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது.

    கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு சுபாஷ் (விஷம்) எலி பேஸ்ட் உட் கொண்டு தற்கொலைக்கு முயன்று திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி உள்ளார்.

    இதனால் மனவேதனை அடைந்த அஷ்டலட்சுமி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஷ்டலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சுபாஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து அவரது உடலையும் போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    தொடர்ந்து இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கணவர்-மனைவி அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×