search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி வக்கீல் கொலையில் சிறுவன் கைது
    X

    தூத்துக்குடி வக்கீல் கொலையில் சிறுவன் கைது

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமாரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
    • பாஸ்கர் என்பவரை மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் அருகே இவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தொடர்ந்து ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை போலீசார் மும்பையில் வைத்து கைது செய்தனர்.

    தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாதுரைச் சாமிபுரத்தை சேர்ந்த தினேஷ் (29), குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூட்டாம்புளியை சேர்ந்த நாமோ நாராயணன், கோரம்பள்ளத்தை சேர்ந்த லெட்சுமணபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் கொலையில் தொடர்புடைய சாத்தான்குளத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×