search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே கலெக்டர், எம்.எல்.ஏ.விடம் அமைச்சர் திடீர் ஆலோசனை
    X

    நடுவழியில் காரை நிறுத்தி கலெக்டர், எம்.எல்.ஏ.விடம் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆலோசனை நடத்தினார்.

    கள்ளக்குறிச்சி அருகே கலெக்டர், எம்.எல்.ஏ.விடம் அமைச்சர் திடீர் ஆலோசனை

    • இன்று 16-ந் தேதி தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கீழ்ப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழி யாக வந்த பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு காரை சாலை யோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். இவரை பார்த்ததும் அந்த வழியாக வந்து கொண்டிருந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன் ஆகியோரும் காரில் இருந்து இறங்கி வந்தனர்.

    அவர்களிடம் இன்று 16-ந் தேதி தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிக்கப்பட்டு உள்ளதா? எங்கெங்கு நடத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட விவர ங்களை கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் தாமும் பங்கேற்ப தாக கூறினார். சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கி ருந்து காரில் புறப்பட்டு சென்ற னர். சாலை யோரத்தில் நின்றபடி அரசு அலுவல ர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு கலந்துரை யாடியது அங்கி ருந்த கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்ட ர்களி டையே நெகிழ்ச்சி யை ஏற்படுத்து வதாக இருந்தது.

    Next Story
    ×