search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மேலூர் ரெயில்வே அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்தாய்வு
    X

    மேலூர் ரெயில் நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு நடத்திய காட்சி.

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மேலூர் ரெயில்வே அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்தாய்வு

    • பிளாரங்களை இணைக்கும் வண்ணம் ரெயில்வே நடைமேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • கோரிக்கைகளை உடனே செய்து தருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்னக ரெயில்வே மூலம் மேலூர் ரெயில் நிலையத்தை புதிய பஸ் நிலையம் அருகே ரூ. 12 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று நடைமுறைக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் மேலூர் ரெயில் நிலையத்தில் கூடுதலாக நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் தெற்கு ரெயில்வே அலுவலரிடம் உழவர்சந்தை முன்பும், புதிய பஸ் நிலை யம் முன்பும் படிக்கட்டுகள் அமைத்திடவும், தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு இடத்தில் படிக்கட்டு அமைத்திடவும், மேலும் 2 பிளாட் பிளாரங்களை இணைக்கும் வண்ணம் ரெயில்வே நடைமேம்பாலம் அமைத்திடவும் கோரிக்கை வைத்தார்.

    அதனை உடனே செய்து தருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், தெற்கு பகுதியில் கே.வி.கே. நகர் உள்ள கீழமேல் சாலை மற்றும் தென்வடல் குறுக்கு சாலைகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    ஆய்வின் போது ரெயில்வே துணை திட்ட பொது மேலாளர் சரவணன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன். மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் ஜீவன்ஜேக்கப், அல்பட், தூத்துக்குடி ரெயில்வே மேலாளர், பொறியாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×