search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே  கிணற்றில் பிணமாக மிதந்த வியாபாரி:  கொலையா? போலீஸ் விசாரணை
    X

    வியாபாரி ஏழுமலை.

    உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வியாபாரி: கொலையா? போலீஸ் விசாரணை

    • வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார்.
    • தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் ஏழுமலை (வயது 43). இவர் இருசக்கர வாகனம் மூலம் புலி, பூண்டு வியா பாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது உறவினர்களுடன் சேர்ந்த ஏழுமலையை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே கிராமத்தை பாலாஜி என்ப வரது கிணற்றில் ஏழமலை பிணமாக மிதந்தார். அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி ஏழுமலை உடலை மீட்டனர். அதன் பின்னர்பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வியாபாரி ஏழுமலை எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×