search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூரில்  தீயணைப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    மேல்மலையனூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

    மேல்மலையனூரில் தீயணைப்பு விழிப்புணர்வு முகாம்

    • மேல்மலையனூரில் தீயணைப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது,
    • தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, தீவிபத்து ஏற்படாமல் எவ்வாறு இருப்பது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உதவி ஆணையர் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சாமள வண்ணன் தலைமையில் வீரர்கள் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, தீவிபத்து ஏற்படாமல் எவ்வாறு இருப்பது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×