search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நாளை மெகா சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நாளை மெகா சட்ட விழிப்புணர்வு முகாம்

    • நெல்லையில் மெகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்டபணிகள் முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • முகாமை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்கள்.

    நெல்லை:

    இந்தியா முழுவதிற்கும் சட்ட விழிப்புணர்வு, சட்ட உதவி மற்றும் அரசு பல நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொண்டு செல்லும் வகையில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவிட்டுள்ளது.

    நெல்லையில் மெகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்டபணிகள் முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. முகாமை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்கள்.

    முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை, ஆதி–திராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூகநலத்துறை, வங்கிகள், மகளிர் திட்டம் வழங்கல் துறை, தாட்கோ, போக்குவரத்து துறை, குழந்தைகள் நலத்துறை, தொழிலாளர் நல ஆணையம், மாற்றுத்திறனாளி நலத்துறை, நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் மானூர் தாசில்தார் அலுவலகம் வட்டார வளர்ச்சித்துறை, அரசு கேபிள் டி.வி., இ-சேவை மையம் ஆகிய துறைகளில் இருந்து நலத்திட்டங்களை வழங்க இருக்கிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் இது சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தெரிவித்தார்.

    Next Story
    ×