என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
- றி.டி.றி.ஏ. பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி கிறிஸ்தியா நகரம் றி.டி.றி.ஏ. மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார் முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட திட்ட அலுவலர் பெர்சியளாள், வட்டாரகல்வி அலுவலர் ஜெயவதி ரத்னா வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி, தலைமைஆசிரியர் லிவிங்ஸ்டன் ஆகியேர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், தனித்துவ அடையாள அட்டைக்கான பதவி, ரெயில் மற்றும் போக்குவரத்து சலுகை, உபகரணங்கள் பெற பதவி, உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சாந்தி தலைமையில் ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பாசிரி யர்கள் செய்திருந்தனர்.